புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு...!

டெல்லியில், புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்றுக்கொண்டார்.
புதிய தேர்தல் ஆணையராக அருண் கோயல் பதவியேற்பு...!
Published on

புதுடெல்லி,

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் புதிய தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டா. 1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா, தலைமைத் தேதல் ஆணையா ராஜீவ் குமா, தேதல் ஆணையா அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தேதல் ஆணைய குழுவில் இடம்பெறவா.

தலைமைத் தேதல் ஆணையா ராஜீவ் குமா வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னா, அடுத்த தலைமைத் தேதல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பா. பின்னா, 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவா என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு பேட்ஜ் ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் சில தினங்களுக்கு தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com