

புதுடெல்லி,
துபாயில் இருந்து டெல்லி வந்த பல்விந்தர் கட்டாரியா என்பவர், விமானத்தில் விதிகளை மீறி சிகரெட் பற்றவைத்து புகைபிடித்தார். அவர் புகை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், அவர் மீது விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், பல்விந்தர் கட்டாரியா மீது விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.