உத்தரகாண்டில் கார் விபத்தில் மந்திரியின் மகன் பலி

உத்தரகாண்டில் கார் விபத்தில் மந்திரியின் மகன் பலியாகி உள்ளார்.
உத்தரகாண்டில் கார் விபத்தில் மந்திரியின் மகன் பலி
Published on

பரேலி,

உத்தரகாண்டில் முதன்மை கல்வி மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக அரவிந்த் பாண்டே உள்ளார். இவரது மகன் அங்குர் பாண்டே. கோரக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்றில் சென்றுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் பரீத்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 24ல் லாரி ஒன்றின் மீது மோதி இவரது கார் விபத்திற்குள்ளானது.

இதில் அவர் பலியானார். அவருடன் காரில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com