பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றாலும் வேற்றுகிரகவாசிகள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும்...ஏன்...எதற்கு...?

வேற்றுகிரகவாசிகள் பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றிருக்கலாம் - ஆனால் அவர்கள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் கணித்து உள்ளனர்.
பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றாலும் வேற்றுகிரகவாசிகள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும்...ஏன்...எதற்கு...?
Published on

வாஷிங்டன்

நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் விண்வெளிக்கு அனுப்பிய சிக்னல்களை வேற்றுகிரகவாசிகள் பெற்றிருக்கலாம் என்றுமானால்  அவர்கள் பதில் வர 27 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது

நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் வானொலி சமிக்ஞைகளின் உலகளாவிய வரிசையாகும், இது அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகளின் பதிலைத் பெறும் முயற்சியில் சூரிய குடும்பத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ரேடியோ சிக்னல்களை அனுப்பியுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுகளின் இதற்கு முன் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஒரு சமிக்ஞை - 1972 இல் ஏவப்பட்டது. இந்த சமிக்ஞை 12 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள 2002 இல் 27 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள வெள்ளை குள்ளன் எனப்படும் இறந்த நட்சத்திரத்தை அடைந்தது.

இந்த இறந்த நட்சத்திரத்திற்கு அருகில் உள்ள எந்த வேற்றுகிரகவாசிகளிடமிருந்தும் திரும்பும் பதில் செய்தியானது குறைந்தது 2029 வரை பூமியை வந்தடையாது என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

பசிபிக் வானியல் சங்கத்தின் பப்ளிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில், அடுத்த நூற்றாண்டில் பூமியின் சமிக்ஞைகளை எதிர்கொள்ளும் நட்சத்திரங்களின் பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வானொலி வானியலாளர் ஜீன்-லூக் மார்கோட் கூறும் போது எங்கள் சிறிய மற்றும் அரிதான பரிமாற்றங்கள் வேற்றுகிரகவாசிகளால் மனிதகுலத்தைக் கண்டறிய வாய்ப்பில்லை.

பூமியின் வானொலி சமிக்ஞைகள் பால்வீதியின் அளவின் ஒரு மில்லியனில் ஒரு பங்கை மட்டுமே எட்டியுள்ளன என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com