புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5,100 கற்போர்கள் தேர்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5,100 கற்போர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் 5,100 கற்போர்கள் தேர்வு
Published on

மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 5,100 கற்போர்கள் கண்றியப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள எழுத படிக்க தெரியாத கற்போர்களுக்கு கல்வி தன்னார்வலர்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளி வளாகம், பணிபுரியும் இடங்களில் கற்போர் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத, படிக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இதில் முதல் கட்டமாக 250 கற்போர் மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சியை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுப்ரமணியன் ஏற்கனவே தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் கண்டறியப்பட்டுள்ள எழுத படிக்க தெரியாத 1,202 கற்போர்களுக்கு பயிற்சி அளிக்க முதற்கட்டமாக 64 கற்போர் மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி, பெரம்பலூர் வட்டார வள மையத்தில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்து பயிற்சியின் அவசியம் மற்றும் அதன் நோக்கத்தை விளக்கி கூறினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com