

சென்னை,
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசினார்.
இதையடுத்து சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.
இந்த நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் மட்டும் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, நாளை (வியாழக்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.