சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளரை வெளியேற்ற தடை

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தினால், மறு உத்தரவு வரும் வரை அந்த நிலத்தின் உரிமையாளரை வெளியேற்ற தடை விதிப்பதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்தது.
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளரை வெளியேற்ற தடை
Published on

சென்னை,

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏராளமான நிலங்களை ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக நிலங்களை அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த திட்டத்துக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால், உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன், மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் என்.எல்.ராஜா, தியாகராஜன், வக்கீல்கள் கே.பாலு, கனகராஜ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டார்கள்.

அப்போது, 8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதமாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி அட்வகேட் ஜெனரல் அதை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com