நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதிமய்யம் சார்பில் நாளை மறுநாள் விருப்ப மனு

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதிமய்யம் சார்பில் நாளை மறுநாள் விருப்ப மனு
Published on

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமை அலுவலகங்களில் நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் விருப்ப மனுவை பெற 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் 7-ஆம் தேதிக்குப் பிறகு தேர்தல் குழு அறிவிக்கும் தேதியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com