முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் தி.மு.க பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் சிலரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை
Published on

நெல்லை,

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி, இவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ந் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். அப்போது உமா மகேசுவரி அணிந்து இருந்த 21 பவுன் நகையும் திருடப்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com