முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை வழக்கில் தி.மு.க பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் சிலரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பெண் பிரமுகரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி முடிவு மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை
Published on

நெல்லை,

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேசுவரி, இவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ந் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். அப்போது உமா மகேசுவரி அணிந்து இருந்த 21 பவுன் நகையும் திருடப்பட்டது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com