செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா
Published on

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின்மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஏகாதச ருத்ரஜெபமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கந்தசஷ்டி விழா விமரிசையாக நடக்கிறது. தண்டாயுதபாணி உற்சவர் சிலைக்கு பழங்கள், பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடக்கிறது. 31-ந் தேதி காலை 9 மணிக்கு செட்டிகுளம் கடைவீதி அருகே அமைந்துள்ள ஏகாம்பரேசுவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com