அரசு போக்குவரத்து ஊழியர் சங்க வாயிற்கூட்டம்

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க வாயிற்கூட்டம் நடந்தது.
அரசு போக்குவரத்து ஊழியர் சங்க வாயிற்கூட்டம்
Published on

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் விழுப்புரம் மண்டலம் சார்பில் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும், ஓய்வுபெற்ற அனைவருக்கும் அனைத்து பணப்பலன்களையும் உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த கூட்டத்திற்கு சங்க துணை பொதுச்செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரகோத்தமன் கண்டன உரையாற்றினார்.

இதில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் ராஜாராம், ஓய்வுபெற்றோர் அமைப்பின் தலைவர் ராமதாஸ், பொதுச்செயலாளர் சகாதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநகர போக்குவரத்து கலைக்குழுவினர் சார்பில் நாடகம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com