கடந்த ஒரு வாரத்தில் மணலி மண்டலத்தில் 10 சதவீதம் தொற்று அதிகரிப்பு

கடந்த ஒரு வாரத்தில் மணலி மண்டலத்தில் 10 சதவீதம் தொற்று அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மணலி மண்டலத்தில் 10 சதவீதம் தொற்று அதிகரிப்பு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் 10 மண்டலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 5 மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மணலி மண்டலத்தில்- 10 சதவீதம், சோழிங்கநல்லூர்- 9.3 சதவீதம், திருவொற்றியூர்- 4.3 சதவீதம், தண்டையார்பேட்டை- 3.9 சதவீதம், வளசரவாக்கம்- 3.5 சதவீதம், அம்பத்தூர் - 3.2 சதவீதம், மாதவரம்- 2.9 சதவீதம், ராயபுரம்- 2.4 சதவீதம், ஆலந்தூர்- 1.8 சதவீதம், பெருங்குடி- 1.7 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அடையாறு மண்டலத்தில் - 2.7 சதவீதம், அண்ணாநகர் - 4.4 சதவீதம், திரு.வி.க நகர் - 6.1 சதவீதம், தேனாம்பேட்டை - 6.3 சதவீதம், கோடம்பாக்கம்- 9.4 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது.

மேற்கண்ட தகவல் மாநகராட்சி இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com