கடலூர் போலீஸ் அணியினருக்கு பாராட்டு

கபடி போட்டியில் சாதனை புரிந்த கடலூர் போலீஸ் அணியினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கடலூர் போலீஸ் அணியினருக்கு பாராட்டு
Published on

கடலூர்

அரசு ஊழியர்களுக்கான 'முதல்-அமைச்சர் கோப்பை- 2023', கபடி விளையாட்டு போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 17-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. இந்த போட்டியில் கடலூர் காவல்துறை சார்பில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் கடலூர் போலீஸ் கபடி அணியினர் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்து, வெண்கல பதக்கம் மற்றும் ரூ.3 லட்சம் பரிசு பெற்றனர். இதையடுத்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் சாதனை படைத்து கடலூர் திரும்பிய போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வன், பயிற்சியாளர் தனசேகரன், அணி மேலாளர் கோவர்த்தனன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com