உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது
உலகளந்த பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவம்
Published on

திருக்கோவிலூர்

சொர்க்கவாசல் திறப்பு

ஆன்மிகத்தில் பிரசித்தி பெற்றதும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததுமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழா எனப்படும் வைகுந்த வாசல் திறப்பு விழா நிகழ்ச்சி அடுத்த மாதம்(ஜனவரி) 2-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி. அடுத்த மாதம் 1-ந் தேதி முடிவடைகிறது.

இதைத் தொடர்ந்து மறுநாள் இராப்பத்து உற்சவம் வைகுந்தவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணி அளவில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். ராப்பத்து உற்சவம் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.

அத்தியாயன உற்சவம்

பின்னர் வருகிற 13-ந் தேதி முதல் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் அத்தியாயன உற்சவம் தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை உலகளந்த பெருமாள் கோவில் மடாதிபதி உ.வே.ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் மேற்பார்வையில், தேவஸ்தான ஏஜென்ட் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com