பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Published on

சுரண்டை:

சுரண்டை அருகே நடுவக்குறிச்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதர நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட குடும்ப நலத்துறை விரிவாக்க கல்வியாளர் ஜெயசித்ரா, சேர்ந்தமரம் வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கரன், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் தொகை பெருக்கமும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர் மாரிமுத்து முதல் பரிசையும், மாணவி கனகா 2-வது பரிசையும், மாணவி மாரிசெல்வி 3-வது பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், கேடயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார சுகாதார புள்ளியலாளர் கோட்டைச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பையா, சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் குமார்செல்வி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com