

சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், நுரையீரல் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் நரசிம்மன், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், கோத்தகிரி பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் அலோக்குமார் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.