மாநில அளவிலான சதுரங்க போட்டி

ராஜபாளையத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது.
மாநில அளவிலான சதுரங்க போட்டி
Published on

ராஜபாளையம், 

ராஜபாளையத்தில் செயல்படும் சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி தொடங்கியது. இந்த போட்டிகளில் விருதுநகர், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து 237 பேர் கலந்து கொண்டுள்ளனர். 8 சுற்றுக்களாக போட்டிகள் நடைபெறுகிறது. ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பையுடன் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் 9, 12 மற்றும் 15 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com