வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 1.4.2018 முதல் 30.6.2018 வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டு நிறைவு பெற்றவர்கள் (மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு) உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பட்டப்படிப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதி தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது இணையதளம் மூலம் பெற்று தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெறும் இளைஞர்கள் தாங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து ஓராண்டு கழித்து 2-ம் மற்றம் 3-ம் ஆண்டின் தொடக்கத்தில் தாங்கள் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும். உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது பதிவு அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com