மகளிர் தின கொண்டாட்டம்

குளோபல் பப்ளிக் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தினம் நடைபெற்றது.
மகளிர் தின கொண்டாட்டம்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே இடைகால் குளோபல் பப்ளிக் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் தங்களது அம்மாவிற்கு தங்கள் கைகளால் வரைந்த "மகளிர் தின வாழ்த்து அட்டை" பரிசளிக்கும் போட்டி நடைபெற்றது.

பள்ளியின் முதல்வர் அந்தோணி பால்ராஜ் மற்றும் பள்ளியின் தாளாளர் ஷேக் உதுமான் ஆகியோர் மகளிர் தின வாழ்த்து அட்டை வரையும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கி பாராட்டினர். இறுதியில் மாணவர்கள் பெண்கள் பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com