

* நைஜர் நாட்டில் கடந்த 9-ந் தேதி ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்தது. பதில் தாக்குதலில் 77 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ராணுவ வீரர்கள் இறப்பையொட்டி அங்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.