சமூகவலைதளத்தில் கோலி புதிய சாதனை

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனிப்பட்ட முறையில் இன்னொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
சமூகவலைதளத்தில் கோலி புதிய சாதனை
Published on

விராட் கோலி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதில் அவ்வப்போது ருசிகர தகவல்களையும், போட்டோக்களையும் பகிர்வது உண்டு. இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தொட்டுள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் கோலி தான். இந்த வகையில் 2-வது இடத்தில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா (பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 99 லட்சம் பேர்) உள்ளார்.

சானியா ஜோடி வெற்றி: துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா ஜோடி 6-4, 4-6, 10-8 என்ற செட் ணக்கில் குட்யாவ்ட்செவா (ரஷியா)- கேத்ரினா ஸ்ரீபோட்னிக் (சுலோவெனியா) இணையை சாய்த்தது. ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 7-6 (2), 3-6, 3-6 என்ற செட் கணக்கில் ரைபகினாவிடம் (கஜகஸ்தான்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com