தனுஷின் - 51வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரம்


தனுஷின் - 51வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 25 April 2024 10:10 AM GMT (Updated: 25 April 2024 12:17 PM GMT)

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'குபேரா' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரகுமானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் பா.பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் ஒரு இயக்குனராக ராயன் படத்தின் மூலம் களமிறங்கி இருக்கின்றார். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

குபேரா படத்தில் தனுஷின் கெட்டப் வித்யாசமாக இருப்பதால் கண்டிப்பாக இப்படமும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் முதல்முறையாக தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா நடித்து வருகின்றார். கதைப்படி நாகர்ஜுனா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். மேலும் நெகட்டிவ் ஷேட் கலந்த வில்லன் கதாபாத்திரத்திலும் நாகர்ஜுனா நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் நாகர்ஜுனா இதுவரை பாசிட்டிவான ரோல்களிலேயே நடித்து வந்த நிலையில் முதல்முறையாக வில்லனாக அதுவும் தனுஷுடன் நடிக்க இருப்பது அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

குபேராக்குப் பின் தனுஷ், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story