பாவனா நடிக்க வந்திருப்பது, அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது -நடிகர் பிருத்விராஜ்
நடிகை பாவனா மீண்டும் நடிக்க வந்திருப்பது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது என்று நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
சித்திரம் பேசுதடி, வெயில், ஜெயம் கொண்டான், அசல் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து பிரபல கதாநாயகியாக இருந்த பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது பாவனாவுக்கு மலையாள படங்களில் நடிக்க மீண்டும் வாய்ப்புகள் வந்துள்ளன. பிருதிவிராஜ் ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில்தான் கடத்தல், பாலியல் தொல்லைகளை பாவனா சந்திக்க நேர்ந்துள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று பாவனா அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பாவனா நடிக்க வந்திருப்பது அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது என்று நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Next Story