இதுவும் கிரிக்கெட் தான் ; போட்டியில் ஒரே பந்தில் வெற்றி பெற்ற கேரள பெண்கள் அணி


இதுவும் கிரிக்கெட் தான் ; போட்டியில் ஒரே பந்தில் வெற்றி பெற்ற கேரள பெண்கள் அணி
x
தினத்தந்தி 24 Nov 2017 12:20 PM GMT (Updated: 24 Nov 2017 12:20 PM GMT)

19 வயதுக்குரியோருக்கான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் ஒரே பந்தில் நாகலந்து அணியை கேரள அணி வெற்றி பெற்றது.

குந்தூர்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  ஏற்பாட்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான   பெண்கள் ஒருநாள் போட்டி கேரளாவில் நடந்தது.  இந்த போட்டியில் கேரளாவுடன்  நாகலாந்து  அணி மோதியது. இதில் டாஸ் வென்ற நாகலாந்து அணி பேட்டிங் செய்தது.  தொடக்க வீராங்கனை ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

உதிரியாக கிடைத்த ரன்கள்  தவிர அனைத்து வீராங்கனைகளும் ஆட்டமிழந்தனர்.  மொத்தம் 17 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 16 ஓவர்களில் ஒரு ரன்கள் கூட எடுக்கவில்லை. ஓப்பனிங் இறங்கிய மேனாகா நீண்ட நேரம் களத்தில் நின்றார். ஆனால் அவர் மட்டுமே ஒரே ரன் மட்டும் எடுத்து இருந்தார். 9 நாகலாந்து வீராங்கனைகள் டக்அவுட். கேரள கேப்டன் மின்னு மணி 4 விக்கெட்டுகள் கைபற்றினார். 4 ரன் அவுட்டுகள்,

அடுத்து பேட்டிங் செய்த  கேரள அணி வீராங்கனை அஞ்சு ராஜூ  முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.

Next Story