தாயை காப்பாற்ற முயன்றபோது தீக்காயம் அடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலன்இன்றி சாவு


தாயை காப்பாற்ற முயன்றபோது தீக்காயம் அடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலன்இன்றி சாவு
x
தினத்தந்தி 21 March 2017 11:07 PM GMT (Updated: 21 March 2017 11:06 PM GMT)

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் வடக்கு 7–வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது47). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.

ஆலந்தூர்,

இவரது மனைவி செல்வி (45) புடவை வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு பவானி (15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். பவானி அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த செல்வி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டதும், பவானி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் செல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற பவானி உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த பவானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story