கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு


கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 24 April 2017 5:17 PM GMT (Updated: 24 April 2017 5:16 PM GMT)

“கோவா சிப்யார்டு லிமிடெட்” எனப்படும் மத்திய கப்பல் நிறுவனம் கோவாவில் செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்த கப்பல் தளத்தில் சூப்பிரன்டென்ட், அசிஸ்டன்ட் சூப்பிரன்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஆபீஸ் அசிஸ்டன்ட், கமர்சியல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 149 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

பல தரப்பட்ட வயதுடையவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சம் 43 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன. 31-3-2017-ந்தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

பட்டப்படிப்பு, முதுநிலை டிப்ளமோ படிப்பு, சி.ஏ. முடித்தவர்கள், என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, செயற்முறைத் தேர்வு ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 15-5-2017-ந் தேதி விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் கணினிப் பிரதி எடுத்து நகல் விண்ணப்பம், கட்டண டி.டி. மற்றும் சுய சான்றொப்பம் செய்த சான்றிதழ் நகல்கள், புகைப்படம் ஆகியவை இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 25-5-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.goashipyard.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story