மெரினாவில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது


மெரினாவில் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 24 April 2017 9:00 PM GMT (Updated: 24 April 2017 7:17 PM GMT)

மெரினாவில் செல்போனை பறித்த 3 பேரை மடக்கி பிடித்தனர்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31). பிரபல செல்போன் கடையில் ஊழியராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு இவர் மெரினா கடற்கரையில், பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே தனது நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த 5 பேர் விஜயகுமாரை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினரும், விஜயகுமாரின் நண்பர்களும் சேர்ந்து, செல்போன் பறித்த 3 பேரை மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 3 பேரும் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள். போலீஸ் விசாரணையில் அவர்களது பெயர் லோகேஷ் (வயது 21), சீனிவாசன் (22), நந்தகுமார் (21) என்று தெரியவந்தது.

பழைய குற்றவாளிகளான அவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதேபோல, சென்னை சூளைமேடு போலீசார், செல்போன் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழரசன் (18), அருண் (21), ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story