பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி


பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 26 April 2017 8:31 PM GMT (Updated: 26 April 2017 8:30 PM GMT)

முகப்பேரில் பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கோயம்பேடு,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அத்தானூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் (வயது 40), தாஸ் (20). கூலித்தொழிலாளிகள்

இருவரும், சென்னை முகப்பேர் ஓரி சாலை பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நடைபெறும் பாதாள சாக்கடை குழாய் மாற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது பாதாள சாக்கடைக்குள் இறங்கி இருவரும் வேலை செய்ய முயன்றனர்.

வி‌ஷவாயு தாக்கி பலி

அப்போது திடீரென இருவரையும் வி‌ஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மயங்கி பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். தகவல் அறிந்ததும் ஜெ.ஜெ.நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இருவரையும் மீட்டனர். இதில் தாஸ் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ராமச்சந்திரனை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story