வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த வியாபாரி கைது
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்துச்சென்று, இளம்பெண்ணை கடத்தி காரில் கற்பழித்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்துச்சென்று, இளம்பெண்ணை கடத்தி காரில் கற்பழித்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
வேலைகேட்டு வந்த இளம்பெண்மும்பை வெர்சோவா பகுதியை சேர்ந்தவர் சுல்தான் சிங்(வயது35). இவர் அந்த பகுதியில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 19–ந்தேதி ஏழை குடும்பத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், வேலைக்காக சுல்தான் சிங்கை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர், இளம்பெண்ணை அந்தேரி லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதிக்கு அழைத்து சென்று வேலை தொடர்பாக பேசி உள்ளார்.
மேலும் கடந்த 22–ந்தேதி தன்னை வந்து சந்திக்கும் படி அப்பெண்ணிடம் தெரிவித்தார். இதனை நம்பிய இளம்பெண் மீண்டும் சுல்தான் சிங்கை சந்தித்து உள்ளார்.
வியாபாரி கைதுஇதனைத்தொடர்ந்து சுல்தான் சிங் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பெண்கள் அழகு நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி, இளம்பெண்ணை தனது காரில் கடத்திச்சென்றார். பின்னர் ஓஷிவாரா மைதானம் அருகே காரை நிறுத்தி, காருக்குள் வைத்தே அப்பெண்ணை மிரட்டி கற்பழித்து உள்ளார். மேலும் நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அந்தேரி போலீசில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சுல்தான் சிங்கை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.