சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


சுர்ஜித் சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 14 Jan 2017 2:22 PM GMT (Updated: 14 Jan 2017 2:21 PM GMT)

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும் மற்றும் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும் மற்றும் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா (வயது 91) உடல்நலக்குறைவால் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும் தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுர்ஜித்சிங் பர்னாலா சண்டிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.   சுர்ஜித்சிங் பர்னாலா 1990-91 2004-2011 வரை 
தமிழக கவர்னராக பதவி வகித்தார். இரண்டு முறை தமிழக கவர்னராக பதவி வகித்தார்.  வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராக பர்னாலா பதவி வகித்துள்ளார். லக்னோவில் சட்டம் பயின்ற பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு,ஆந்திரா,உத்தரகாண்ட் உள்ளிட்ட 4 மாநில கவர்னராக இருந்தவர் பர்னாலா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் கூறியதாவது:

"சுர்ஜித் சிங் பர்னாலாவின் மறைவு வேதனை அளிக்கிறது.பர்னாலாவின் பங்களிப்பை தேசம் நினைவில் கொள்ளும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story