காஷ்மீரில் ராணுவ முகாமுக்குள் ஊடுருவ மர்ம நபர் முயற்சி


காஷ்மீரில்  ராணுவ முகாமுக்குள் ஊடுருவ மர்ம நபர் முயற்சி
x
தினத்தந்தி 17 Jan 2017 1:13 PM GMT (Updated: 17 Jan 2017 1:13 PM GMT)

ராணுவ முகாமுக்குள் ஊடுருவ முயன்ற மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு ராணுவம் பிடித்தது. காயம் அடைந்த அவரிடம் விசாரணை நடத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது.


ஜம்மு, 

காஷ்மீரில் நக்ரோட்டா ராணுவ முகாம் உள்ளது. அந்த முகாமின் வேலிக்குள் நேற்று  இரவு, அடையாளம் தெரியாத ஒருவர் நுழைய முயற்சித்தார். அவரை காவலாளி தடுத்தார். ஆனால் அதையும் மீறி அவர் எல்லை வேலியை தாண்டி, முகாமுக்குள் ஓட முற்பட்டார். அப்போது காவலாளி அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் காயம் அடைந்தார்.

உடனே அவரை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்து, முதல் உதவி அளித்தனர். அதைத் தொடர்ந்து அவரை அருகில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிகிச்சை முடிந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும், அதன்பின்னர்தான் அவர் யார், எதற்காக ராணுவ முகாமுக்குள் ஊடுருவ முயற்சித்தார் என்பது போன்ற விவரங்கள் தெரிய வரும்.


Next Story