டெல்லியில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவு
டெல்லியில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் இன்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.0 ஆக பதிவானது. காலை 7.16 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வீடுகள் லேசான அதிர்ந்ததால், கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஒரு சில இடங்களில் மக்கள் வீதிகளுக்கு வந்ததை காண முடிந்தது. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
Earthquake tremors of magnitude 3.0 felt in New Delhi at around 7:16 AM.
— ANI (@ANI_news) January 18, 2017
அதேபோல், மிசோராமின் அய்ஸ்வால் பகுதியிலும் சுமார் 7:16 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.7 என பதிவாகியுள்ளது.
Next Story