பாராளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை எம்.பிக்களின் செயல்பாட்டை வைத்தே உள்ளது சுமித்ரா மகாஜன்


பாராளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை எம்.பிக்களின் செயல்பாட்டை வைத்தே உள்ளது  சுமித்ரா மகாஜன்
x
தினத்தந்தி 19 Feb 2017 10:57 AM GMT (Updated: 19 Feb 2017 10:57 AM GMT)

பாராளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை எம்.பிக்களின் செயல்பாட்டை வைத்தே உள்ளது என்று கூறினார்.

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தெற்காசிய சபாநாயகர்கள் மாநாட்டை இந்திய அரசு நடத்துகிறது. இதற்கான மாநாட்டை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இன்று நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த சபாநாயகர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானும், மியான்மரும்  இந்த மாநாட்டில் பங்கேற்க இயலவில்லை என கூறப்படுகிறது.

மாநாட்டை தொடங்கி வைத்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது:

பாராளுமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை எம்.பிக்களின் செயல்பாட்டை வைத்தே உள்ளது என்றார்.

நாளை நிறைவு விழாவின்போது ‘இந்தோர் தீர்மானத்தை’  உச்சி மாநாடு நிறைவேற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Next Story