ஜம்மு காஷ்மீர்:புல்வாமா அருகே பயங்கரவாதி ஒருவர் கைது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே பயங்கரவாதி ஒருவரை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தனின் பேரில் சென்ற பாதுகாப்பு படையினர் டிரால் பகுதியில் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதி ஒருவர் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது கையெறி குண்டு வீசி தாக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதியை கையும் களவுமாக கைது செய்தனர்.
Next Story