விஜயவாடாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 30 பேர் காயம்


விஜயவாடாவில் ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 9 பேர் பலி 30 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2017 4:36 AM GMT (Updated: 28 Feb 2017 4:36 AM GMT)

விஜயவாடாவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 30 பேர் காயம் அடைந்தனர்.

விஜயவடா,

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்நகரில் இருந்து   ஐதாராபத்திற்கு  தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை ஆந்திராவில் உள்ள விஜயவாடா அருகே  ஆற்று மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில், 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள நந்திகம அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story