உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டது: 9 பேர் காயம்


உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டது: 9 பேர் காயம்
x
தினத்தந்தி 30 March 2017 3:16 AM GMT (Updated: 30 March 2017 3:16 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மகோபா ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 2.07 மணியளவில் ஜபால்பூரில் இருந்து  நிசாமூதின் செல்லக்கூடிய மாகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

ரயிலின் பின் பகுதியில் இருந்த 8 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் 9 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்களின் விவரங்களை குடும்பத்தினர் தெரிந்து கொள்ளும் வகையில் பிரத்யேக உதவி எண்களையும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Next Story