மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து 3 பேர் பலி 65 பேரை காணவில்லை என தகவல்


மேற்கு வங்காளத்தில் படகு கவிழ்ந்து விபத்து 3 பேர் பலி 65 பேரை காணவில்லை என தகவல்
x
தினத்தந்தி 26 April 2017 10:59 AM GMT (Updated: 26 April 2017 10:58 AM GMT)

மேற்கு வங்காளத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் ஹூக்ளி ஆற்றில் படகு கவிழ்ந்து 3 பேர் பலியாகினர் 65 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் ஹூக்ளி ஆற்றில் 65 பயணிகளை ஏற்றி சென்ற படகு ஒன்று திடீரென ஏற்பட்ட அலையால் நீரில் மூழ்கியது.  இதில் 3  பேர் பலியாகி உள்ளனர். சுமார் 65  பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் நீச்சல் அடித்து கொண்டு கரை வந்து சேர்ந்தனர். சுமார் 20 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் நீரில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story