ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது


ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2017 7:38 AM GMT (Updated: 26 May 2017 7:38 AM GMT)

ரேஷன் கடைக்கு சென்ற 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்பூர் மாவட்டம் நாவாலா கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பொருட்களை வாங்க அதே கிராமத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் வந்துள்ளனர்.

அப்போது, ரேஷன் கடையில் இருந்த 5 வாலிபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, ரேஷன் கடை டீலர் எடுத்துள்ள ராகுல், அவரது நண்பர்களான ராஜன், சச்சின், ரோஹித் மற்றும் அங்கித் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். மருத்துவ அறிக்கையின்படி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

பொதுமக்கள் வந்து செல்லும் ரேஷன் கடையிலேயே சிறுமிகளுக்கு நேர்ந்த இந்த கொடுமை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story