சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை வேண்டும் கடிதம் எழுதி கேட்ட ரெயில்வே தொழிலாளி


சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை வேண்டும் கடிதம் எழுதி கேட்ட ரெயில்வே தொழிலாளி
x
தினத்தந்தி 22 Jun 2017 10:43 AM GMT (Updated: 22 Jun 2017 10:43 AM GMT)

இந்தியாவில் தொழிலாளி ஒருவர், தன் உயர் அதிகாரிக்கு சிக்கன் சாப்பிட ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என்று எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்ராஜ். இவர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தீப்கா ரெயில்வே நிலையத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் தன் உயர் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், இந்துக்கள் பண்டிகை அடுத்த மாதம் வரவிருக்கிறது.

தங்கள் வீட்டில் அன்றைய மாதம் அசைவம் எதுவும் சமைக்க மாட்டோம். அதற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. இதனால் ஏக்கத்தில் இருக்கும் எனக்கு சிக்கன் சாப்பிடுவதற்கு ஒரு வாரம் விடுமுறை தர வேண்டும் என்றும் அப்போது தான் தன் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்கள் கிடைக்கும், அதன் பின் தன்னால் உற்சாகமாக வேலை செய்ய முடியும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

தற்போது அந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

Next Story