ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கும் மெகா ஆபர் ரூ.699க்கு விமானப்பயணம்
பருவமழைக் காலத்தை ஒட்டி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.699க்கு விமானப் பயணம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பருவமழைக் காலத்தை ஒட்டி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரூ.699க்கு விமானப் பயணம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று (28.06.17) தொடங்கியுள்ளது. முதலில் புக் செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் புக்கிங் தொடங்கியுள்ளது.
இந்த மெகா ஆபர் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - ஜம்மு, கவுகாத்தி - அகர்த்தலா, ஐஸ்வால் - கவுகாத்தி மற்றும் பல இடங்களுக்கு செல்லலாம். டிக்கெட் மற்றும் வரி உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.699 மட்டுமே என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆபரைப் பயன்படுத்தி டிக்கெட் புக் செய்பவர்களில் பரிசு பெறுபவருக்கு சர்வதேச சுற்றுலா செல்ல டிக்கெட் வழங்கப்படும். துபாய், மாலி, கொழும்பு, பேங்காக் அல்லது மஸ்கட் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு ஊருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த புக்கிங் இன்று முதல் ஜூலை 4 ஆம் தேதி நள்ளிரவு வரை இருக்கும். ஜுலை 14, 2017 முதல் 24 மார்ச், 2018 வரை எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். டிரான்சிட் எனப்படும் இன்னொரு விமானத்தில் மாறிச் செல்லும் வாய்ப்பை இதில் பயன்படுத்த முடியாது. ஒரே விமானத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாய்ப்பு மட்டுமே உண்டு.
இந்த மெகா ஆபர் மூலம் ஜம்மு - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - ஜம்மு, கவுகாத்தி - அகர்த்தலா, ஐஸ்வால் - கவுகாத்தி மற்றும் பல இடங்களுக்கு செல்லலாம். டிக்கெட் மற்றும் வரி உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.699 மட்டுமே என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆபரைப் பயன்படுத்தி டிக்கெட் புக் செய்பவர்களில் பரிசு பெறுபவருக்கு சர்வதேச சுற்றுலா செல்ல டிக்கெட் வழங்கப்படும். துபாய், மாலி, கொழும்பு, பேங்காக் அல்லது மஸ்கட் ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு ஊருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த புக்கிங் இன்று முதல் ஜூலை 4 ஆம் தேதி நள்ளிரவு வரை இருக்கும். ஜுலை 14, 2017 முதல் 24 மார்ச், 2018 வரை எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். டிரான்சிட் எனப்படும் இன்னொரு விமானத்தில் மாறிச் செல்லும் வாய்ப்பை இதில் பயன்படுத்த முடியாது. ஒரே விமானத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் வாய்ப்பு மட்டுமே உண்டு.
Related Tags :
Next Story