சோனியா, ராகுல் காந்தி மவுனம் சாதிப்பது ஏன்? ஆயுத வியாபாரியுடன் வதேராவுக்கு தொடர்பா? நிர்மலா சீதாராமன் கேள்வி


சோனியா, ராகுல் காந்தி மவுனம் சாதிப்பது ஏன்? ஆயுத வியாபாரியுடன் வதேராவுக்கு தொடர்பா? நிர்மலா சீதாராமன் கேள்வி
x
தினத்தந்தி 18 Oct 2017 3:42 AM GMT (Updated: 18 Oct 2017 3:42 AM GMT)

சோனியா, ராகுல் காந்தி மவுனம் சாதிப்பது ஏன்? ஆயுத வியாபாரியுடன் வதேராவுக்கு தொடர்பா? நிர்மலா சீதாராமன் கேள்வி விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லியில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுடன் தலைமறைவு ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. லண்டனில் வதேராவுக்கு சொந்தமான வீட்டை சஞ்சய் பண்டாரி புதுப்பித்து அங்கு தங்கி உள்ளார்.

இந்நிலையில் சஞ்சய் பண்டாரியின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. இதே போல் 3 முறை அவருடைய வங்கி கணக்கில் முறைகேடாக பணம் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கும் வதேராவின் லண்டன் வீட்டை புதுப்பித்ததற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மவுனம் சாதிப்பது ஏன்? அவர்கள் வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் வதேராவின் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறார்கள் என்று அர்த்தமா?. அடிக்கடி டுவிட்டரில் தகவல் வெளியிடும் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து ஏன் கருத்து தெரிவிக்காமல் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

’வதேரா குற்றமற்றவர் என்பது உண்மையானால் ஏன் மான நஷ்ட வழக்கு தொடராமல் இருக்கிறார்?’ என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story