உத்தரபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து:12 பேர் காயம்


உத்தரபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து:12 பேர் காயம்
x
தினத்தந்தி 16 Dec 2017 5:24 AM GMT (Updated: 16 Dec 2017 5:24 AM GMT)

உத்தரபிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து 12 பேர் காயம் அடைந்தனர்.

பாண்டா,

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டம் ராஜபூர் சாலையில் பயணிகள் பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இதில் 12 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

பஸ் வேகமாக விரைந்து வந்ததால் இந்த விபத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story