அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 நாட்கள் இன்சுலின் செலுத்த முடிவு


அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 நாட்கள் இன்சுலின் செலுத்த முடிவு
x

Image Courtacy: PTI

அரவிந்த் கெஜ்ரிவாலை 5 நாட்களுக்கு இன்சுலின் அளவை தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.

புதுடெல்லி,

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், நீரிழிவு நோயாளி ஆவார்.

இந்நிலையில் திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு, ஒரு நாளைக்கு இரண்டு முறை என்கிற விகிதத்தில் குறைந்த அளவிலான இன்சுலின் மருந்தை வழங்குமாறு நகர நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரியம் நிலைமையை மதிப்பாய்வு செய்யும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். எய்ம்ஸ் இயக்குனரால் அமைக்கப்பட்ட குழுவில் ஒரு உட்சுரப்பியல் நிபுணர் மற்றும் நீரிழிவு நிபுணர் உள்ளார்.

இதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் தினமும், மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன், இரண்டு முறை இன்சுலின் குறைந்த அளவிலேயே பெற உள்ளார்.


Next Story