சோழிங்கநல்லூர் சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி ஒரு மாணவர் காயம்


சோழிங்கநல்லூர் சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி ஒரு மாணவர் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2017 9:11 AM GMT (Updated: 18 Jan 2017 9:11 AM GMT)

சோழிங்கநல்லூர் சந்திப்பில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, கூட்டத்தைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர்.


சென்னை


மெரீனா கடற்கரையில லட்சக்கணக்காண மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலையில் பழைய மகாபலிபுரம் சாலை உள்ள  கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய மகாபலிபுரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார், மாணவர்களையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலைந்து போகுமாறு கூறினார்.

ஆனால் மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சோழிங்கநல்லூர் சந்திப்பில் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே, கூட்டத்தைக் கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர்.

போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் மறியல் செய்ததால் தடியடி நடத்த வேண்டிய தேவை வந்தது  என காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது

Next Story