ஜல்லிக்கட்டுப போராட்டத்துக்கு ஆதரவு தனியார் பள்ளிகள் நாளை இயங்காது
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
இது குறித்து தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் டி.சி. இளங்கோவன் தர்மபுரியில் பேட்டி அளித்தார்.அப்போது அவர கூறியத்தாவது:-
தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் ஆட்டோ மற்றும் வாகனங்கள் ஸ்டிரைக் காரணமாக, பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்சி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பள்ளிகள் இயங்காது என்று தெரிவித்துள்ளார்.
நாளை அரசுப் பள்ளிகள் இயங்குவது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Next Story