ஜல்லிக்கட்டுப போராட்டத்துக்கு ஆதரவு தனியார் பள்ளிகள் நாளை இயங்காது


ஜல்லிக்கட்டுப போராட்டத்துக்கு ஆதரவு  தனியார் பள்ளிகள் நாளை இயங்காது
x
தினத்தந்தி 19 Jan 2017 10:44 AM GMT (Updated: 19 Jan 2017 10:44 AM GMT)

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தக் கோரி நடைபெற்று வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை

இது குறித்து தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் டி.சி. இளங்கோவன் தர்மபுரியில் பேட்டி அளித்தார்.அப்போது அவர கூறியத்தாவது:-

தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்காது என்று அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் ஆட்டோ மற்றும் வாகனங்கள் ஸ்டிரைக் காரணமாக, பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்சி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பள்ளிகள் இயங்காது என்று தெரிவித்துள்ளார்.

நாளை அரசுப் பள்ளிகள் இயங்குவது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Next Story