மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த தடை உத்தரவு


மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த தடை உத்தரவு
x
தினத்தந்தி 19 Jan 2017 11:06 AM GMT (Updated: 19 Jan 2017 11:06 AM GMT)

மதுரையில் பிப்ரவரி 3ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் பிப்ரவரி 3ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை நகர காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த வேண்டுமெனில் ஐந்து நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story