முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஜல்லிக்கட்டு பற்றி ஆலோசனை


முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஜல்லிக்கட்டு பற்றி ஆலோசனை
x
தினத்தந்தி 19 Jan 2017 1:06 PM GMT (Updated: 19 Jan 2017 1:06 PM GMT)

டெல்லியில் சட்ட வல்லுநர்களுடன் ஜல்லிக்கட்டு பற்றி முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக முதல் அமைச்சர் பன்னீர் செல்வம் நேற்று டெல்லிக்கு சென்றார்.

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த பின் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு தொடர்பாக ஓர் அவசர சட்டத்தை கொண்டு வரவேண்டும் என பிரதமரிடம் எடுத்து கூறினேன். தமிழர்களின் உணர்வுகளை முழுமையாக அறிவேன் என மோடி கூறினார்.  உச்சநீதிமன்ற தீர்ப்பு தராத நிலையில் தமிழக அரசு நடவடிக்கைக்கு மோடி ஆதரவு அளித்து உள்ளார் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு பற்றி சட்ட வல்லுநர்களுடன் டெல்லியில் பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.  அரசு மூத்த அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Next Story