பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு


பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 26 April 2017 10:48 PM GMT (Updated: 26 April 2017 10:47 PM GMT)

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில், தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தலைமை அலுவலகம் செயல்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.அலுவலகமும் இங்கு தான் உள்ளது.

இந்த அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றும் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரமும் போலீசார் காவலுக்கு உள்ளனர். போலீஸ் காவலையும் மீறி மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story