பாகுபலி-2 திரைப்படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளநிலையில் இணையதளத்தில் வெளியானது
தமிழகத்தில் பாகுபலி-2 திரைப்படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளநிலையில் இணையதளத்தில் வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. தமிழில் பாகுபலி-2 திரைப்படம் 650 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது தமிழில் பாகுபலி-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பட விநியோகஸ்தர்- படதயாரிப்பாளர் இடையேயான பிரச்னையால் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் தெலுங்கு மொழியில் பாகுபலி- 2 திரைப்படம் திரையிடப்பட்டது.
தமிழகத்தில் பாகுபலி-2 திரைப்படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளநிலையில் இணையதளத்தில் வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இணையதளங்களில் முழு படமும் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இணையதளத்தில் பாகுபலி - 2 திரைப்படம் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Next Story