காதலனுடன் செல்போனில் பேசுவதை கண்டித்ததால் பட்டதாரி பெண் தற்கொலை


காதலனுடன் செல்போனில் பேசுவதை கண்டித்ததால் பட்டதாரி பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2017 10:15 PM GMT (Updated: 24 Jun 2017 5:08 PM GMT)

காதலனுடன் செல்போனில் பேசுவதை தந்தை கண்டித்ததால் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

திருச்சியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் நந்தினி (வயது 24). பட்டதாரியான இவர் கல்லூரி படிக்கும் போது திருச்சியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக கூறப்படுகிறது.

அவர்களது காதல் விவகாரம் நந்தினியின் தந்தைக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது மகளை கண்டித்ததுடன் காதலை கைவிடுமாறு கூறினார். மேலும் தனது மகளை சென்னை கோட்டூர் மாந்தோப்பு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.  ஆனால் நந்தினி தனது காதலனுடன் இருந்த தொடர்பை விடவில்லை. அவர் தொடர்ந்து செல்போன் மூலம் தனது காதலனுடன் பேசி வந்துள்ளார். இதை பார்த்த நந்தினியின் உறவினர் அவரை கண்டித்துள்ளார்.

இதுகுறித்து நந்தினியின் தந்தையிடம் அவர் புகார் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் உடனே போன் மூலம் நந்தினியை கண்டித்தார்.

இதில் மனவேதனை அடைந்த நந்தினி தனது துப்பட்டாவால் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன் பேரில் வந்த கோட்டூர்புரம் போலீசார் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story